ஆஸ்திரேலிய போர்க் கைதியை ரஷ்யா கொலை செய்திருந்தால் அதற்கு எதிராக முழு பலத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், ரஷ்யா தூதுவரை வெளியேற்ற வேண்டும் எனவும் கூட்டாட்சி அரசை, உக்ரைன் சமூகம் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனுக்காக போரிட்ட மெல்பேர்ணை சேர்ந்த ஒஸ்கார் ஜென்கின்ஸ், ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான காணொளியும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஒஸ்கார் ரஷ்ய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரின் நிலை தொடர்பில் அறிவதற்கு ஆஸ்திரேலியா தீவிரமாக முயற்சித்துவருகின்றது.
சிலவேளை ஒஸ்கார் கொல்லப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கான ரஷ்ய தூதுவரை அழைத்து இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இது விடயத்தில் கடுமையான நடவடிக்கையை ஆஸ்திரேலிய உக்ரைன் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஒஸ்கார் கொல்லப்பட்டிருந்தால் ரஷ்யாவுடனான இராஜதந்திர தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும் என்று மேற்படி கூட்டமைப்பின் இணைத் தலைவர் கட்டெரினா அர்கிரோ தெரிவித்துள்ளார்.