பேர்த் விமான நிலைய பாதுகாப்பு வலயத்துக்குள் அத்துமீறி நுழைந்தார் எனக் கூறப்படும் பெண் பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான குறித்த பெண், செல்லுபடியான விமான அனுமதி ரிக்கெட் இன்றி, உள்நுழைந்துள்ளார்.
பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ள, விமான நிலைய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் என அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்துக்காக அதிகபட்சமாக 15 ஆயிரத்து 650 டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம்.
ஆஸ்திரேலியாவிலுள்ள 9 பிரதான விமான நிலையங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பெரடல் பொலிஸார் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.