செம்போ போத்தல்களுக்குள் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து, அவற்றை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி வந்த அமெரிக்க பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதான நபரொருவர் டிசம்பர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிரஸ்பேன் நீதிமன்றத்தில் மீண்டும் முற்படுத்தப்படவுள்ளார்.
பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து சுமார் 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர், டிசம்பர் 27 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணை மறுக்கப்பட்டது. இந்நிலையிலேயே இன்று மீண்டும் விசாரணை இடம்பெறுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.