சன்ஷைன் கோஸ்ட் நீர்வீழ்ச்சியில் விழுந்த சிறுமியும், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட சிறுவனும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
வாப்பா நீர்வீழ்ச்சிப் பகுதியிலேயே நேற்று மதியம் இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17 வயது சிறுமி நீரில் விழுந்துள்ளார், பின்னர் அவரைக் காப்பாற்றுவதற்காக அவரின் நண்பரான 17 வயது சிறுவன் நீரிக்குள் சென்றுள்ளார்.
இருவரும் மீண்டுவரவில்லை. இதனையடுத்து மீட்பு நடவடிக்கை ஆரம்பமானது. மாலைவேளையில் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.
வாப்பா நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு அழகாக இருந்தபோதிலும் மழைக்காலங்களில் அதில் நீராட முற்படுவது ஆபத்தான செயலாகும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.