தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயத முனையில் ஆறு கொள்ளைச் சம்பவங்கள், வாகன திருட்டு உட்பட பல குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஜனவரி 16 மற்றும் 19 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 36 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.