சிட்னியிலுள்ள குழந்தை பராமரிப்பு நிலையம்மீது தீ வைப்பு தாக்குதல் நடத்தப்பட்டு, யூத எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் பின்னணியில் செயற்பட்டவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையும் ஆரம்பமாகியுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து சிட்னி மாரூப்ராவிலுள்ள குழந்தை பராமரிப்பு நிலையத்தை கண்காணிப்பதற்கு பிரதமர் அந்தோனீ அல்பானீஸி சென்றிருந்தார்.
அத்துடன், யூத எதிர்ப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய அமைச்சரவைக் கூட்டமும் இன்று அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது.
தீ வைப்பு தாக்குதலில் கட்டடம் தீக்கிரையாகியுள்ளது.
ஜெப ஆலயமொன்றுக்கு அருகிலேயே குறித்த குழந்தை பராமரிப்பு நிலையம் அமைந்துள்ளது. குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை எரித்தவர்களை நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர், விலங்குகள் என விமர்சித்துள்ளார்.