யூத எதிர்ப்பு அலை நாடு முழுதும் அதிகரிக்க ஆஸ்திரேலியா அனுமதிக்கின்றது என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
சிட்னியில் குழந்தை பராமரிப்பு நிலையம்மீது தீ வைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையிலேயே இஸ்ரேல் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அல்பானீஸி அரசின் தனிப்பட்ட கொள்கையானது, ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்துக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகின்றது என்று இஸ்ரேல் துணை வெளிவிவகார அமைச்சர் ஷாரன் ஹாஸ்கெல் சுட்டிக்காட்டியுள்ளார்.
யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்றதாலேயே எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் மறுத்துள்ளார்.
யூத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும், தேசிய அமைச்சரவைக் கூட்டம்கூட நடத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.