ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் பெடரல் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் அடிப்படையில் நிதி உதவியின் பின்னணியில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளோ, அரசாங்கங்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது. தனி நபர்களே நிதி உதவி வழங்கி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
யூத எதிர்ப்பு தாக்குதல்களுக்கு பின்னல் வெளிநாட்டவர்கள் உள்ளனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.