மேற்கு ஆஸ்திரேலியாவில், பேர்த்தில் உள்ள தடுப்பு மையத்தில், பூர்வக்குடி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
17 வயதான குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
மேற்படி தடுப்பு முகாமில் ஒரு வருட காலப்பகுதிக்குள் பூர்வக்குடி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம், பூர்வக்குடி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ இது துன்பகரமான சம்பவமாகும், இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.” – என்று மேற்கு ஆஸ்திரேலிய பிரீமியர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையே குறித்த இளைஞன் தடுப்பு மையத்துக்கு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.