கன்பராவில் தேசிய இனப்படுகொலை தொடர்பான கல்வி மையத்தை அமைப்பதற்காகவும், மேற்கு ஆஸ்திரேலியாவில் பாடசாலை கல்விக்கான வசதிகளை மேம்படுத்தவும் 6.4 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் அரசால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹோலோகாஸ்ட் (இனப்படுகொலை) என்பது இரண்டாம் உலகப் போரின்போது, கோடிக்கணக்கான யூதர்கள் அவர்கள் யூதர்கள் என்பதற்காகவே கொல்லப்பட்ட வரலாற்றின் கொடூரமான சம்பவமாகும்.
உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் ’ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ்’ வதை முகாம் விடுதலையின் 80 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையிலேயே பிரதமரால் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
' ஹோலோகாஸ்டின் அட்டூழியங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது." என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
' குறித்த கல்வி மையம் நமது இளம் ஆஸ்திரேலியர்களுக்கு ஹோலோகாஸ்டின் கொடூரங்களைப் பற்றிக் கற்பிக்கவும், சிறு வயதிலிருந்தே இதுபோன்ற தப்பெண்ணம், வெறுப்பு மற்றும் வன்முறைக்கு இங்கு இடமில்லை என்பதை அவர்களுக்குக் தெளிவுபடுத்தவும் உதவும்." எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.
யூத சமூகத்துடன் இணைந்து கட்டப்படவுள்ள புதிய மையத்திற்கு வருடாந்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் வருகை தருவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.