தெற்கு ஆஸ்திரேலிய அமைச்சர் டான் கிரீகன், அரசியலில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று விடுத்துள்ளார்.
அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை எனவும், குடும்ப விவகாரத்தைக் கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை பதவியை அவர் துறந்த பின்னர், அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட டான் கிரீகன், ஒன்பது மாதங்களுக்கு லேபர் கட்சி அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தார்.
தனது குடும்பத்துக்காக அதிகமாக சில விடயங்களை செய்ய வேண்டியுள்ளதாலேயே அதிகம் நேசித்த அமைச்சு பதவியையும் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.