நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த எட்டு வயது சிறுமிக்கு இன்சுலினை வழங்காது, அவர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தனர் எனக் கருதப்பட்ட மதப்பிரிவொன்றை சேர்ந்த உறுப்பினர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஜனவரியிலேயே எலிசபெத் ஸ்ட்ரூஸ் என்ற சிறுமி இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரது உயிரிழப்பு கொலையாகக் கருதப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் தந்தை, மதப்பிரிவின் மதகுரு உட்பட 14 பேரே குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இச்சிறுமிக்கு உயிர்வாழ்வதற்கு இன்சுலின் தேவைப்பட்டது. எனினும், புனிதர்கள் எனக் கூறிக்கொள்ளும் மதப் பிரிவினர், அதனை சிறுமிக்கு வழங்காமல், மூட நம்பிக்கையில் இருந்துள்ளனர்.
' நோய்க்கு சிகிச்சை அவசியமில்லை, கடவுள் குணப்படுத்துவார்" என்ற மூட நம்பிக்கையில் இக்குழுவினர் இருந்துள்ளனர்.
சிறுமி உயிரிழந்த பிறகும், அவர் உயிர்த்தெழுவார் என நினைத்து, மத வழிபாடுகளில் அவர்கள் ஈடுபட்டுவந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
14 பேருக்கான தண்டனை எதிர்வரும் 11 ஆம் திகதி குயின்ஸ்லாந்து உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவுள்ளது.