உக்ரைன் இராணுவத்துக்காக போரிட்ட நிலையில் ரஷ்யாவால் கைது செய்யப்பட்டுள்ள ஆஸ்திரேலியரான ஒஸ்கார் ஜென்கின்சுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டுவருகின்றது என்று பிரதமர் அந்தோனீ அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஒஸ்காரை ரஷ்யா கொலை செய்திருக்கலாம் என ஆரம்பத்தில் தகவல் வெளியானது. எனினும், தற்போது அவர் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. அதாவது அவர் உயிருடன் உள்ளார் என ரஷ்ய தரப்பில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது
.
இந்நிலையிலேயே இத்தகவலை உறுதிப்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, போர்க் கைதியான ஒஸ்கார் உயிருடன் உள்ளார் என ரஷ்ய தரப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் குறிப்பிட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்யுமாறும் ரஷ்யாவை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது விடயத்தில் சர்வதேச சட்டத்துக்கமைய ரஷ்யா செயல்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.