லேபர் ஆட்சியில் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் உதவி பொருளாளர் ஸ்டீபன் ஜோன்ஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அவர் இன்று அறிவித்துள்ளார்.
விட்லம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், 15 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்குரிய காரணத்தை அவர் இன்னும் வெளிப்படுத்தவில்லை.
கூட்டாட்சி தேர்தல் நெருங்கும்வேளை, அடுத்த தேர்தலில் களமிறங்கப்போவதில்லை என லேபர் கட்சியின் முக்கிய நான்கு உறுப்பினர்கள் இதுவரை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.