சிட்னியில் கரவனிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக தேசிய பாதுகாப்பு சபை இன்று காலை கூடியுள்ளது.
தேசிய பாதுகாப்பு குழு இன்று காலை கூடியதை பிரதமர் அந்தோனீ அல்பானீஸி உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களால் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன எனவும், அது தொடர்பில் தனக்கு தகவல்கள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவத்தை சிலர் அரசியலாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும், இது அரசியல் செய்வதற்குரிய நேரமல்ல எனவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் பிரதமர் அந்தோனீ அல்பானீஸி மேலும் தெரிவித்துள்ளார்.