ஆஸ்திரேலிய அரசும், ஊடகங்களும் ரஷ்ய எதிர்ப்பு அலையை ஊக்குவிப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒஸ்கார் ஜென்கின்ஸ் விவகாரத்தை மையப்படுத்தியே மொஸ்கோ தரப்பிலிருந்து கன்பராமீது இவ்வாறு விமர்சனக் கணை தொடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்காக போரிட்ட ஆஸ்திரேலியரான ஒஸ்காரை ரஷ்யா கைது செய்துள்ளது. அவர் கொல்லப்பட்டுவிட்டார் என ஆரம்பத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக ரஷ்ய தரப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமர் அந்தோனீ அல்பானீஸி உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஒஸ்கார் விவகாரத்தில் ரஷ்யா தொடர்பில் ஆஸ்திரேலியாவால் அவதூறு பரப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யர்களை கொல்வதற்கு உக்ரைனுக்கு செல்வது சிறந்த செயல் என ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளும், ஊடகங்களும் ஊக்குவிக்கின்றன என அறிக்கையொன்றின் ஊடாக ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.