மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் வன்முறை வெடித்துள்ள நிலையில், அது தொடர்பில் ஆஸ்திரேலியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் விரைவில் தணிக்கப்பட வேண்டும் எனவும், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கொங்கோவின் முக்கிய நகரத்தை ருவண்டா நாட்டின் ஆதரவு பெற்ற எம் - 23 போராளி குழு கைப்பற்றியுள்ள நிலையில், கொங்கோ இராணுவத்துக்கும், போராளிகளுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
உள்நாட்டு வன்முறையால் ஐநா அமைதிப்படையை சேர்ந்த சிலர் உயிரிழந்துள்ளனர். மனிதாபிமான பணியாளர்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மத்திய ஆபிரிக்க பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை முடிவுக்கு வரவேண்டும் எனவும், மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.