மியன்மார் நாட்டில் அமுலில் உள்ள அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள இராணுவ ஆட்சிமீது ஆஸ்திரேலியா அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது .
ஜனநாயக முறையில் மீண்டும் தேர்தலை நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசர நிலை, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இந்நிலையிலேயே அவசர நிலையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதான உத்தரவை மியன்மார் இராணுவ தளபதி மாவோங் ஹ்லைங் அறிவித்துள்ளார்.
மியான்மிரில் 2021ஆம் ஆண்டு ஜனநாயகமுறையில் தேர்வு செய்யப்பட்ட ஆங் சான் சூகி அரசை கவிழ்க்கப்பட்டு இராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் இவ்வாறு இராணுவ ஆட்சி ஏற்பட்டு 4 வருடங்கள் ஆகும் நிலையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கூட்டறிக்கையொன்றை விடுத்துள்ளன.
மியன்மாரில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மேற்படி நாடுகள் கண்டித்துள்ளன.
அத்துடன், மியன்மார் இராணுவ ஆட்சி வன்முறைகளை நிறுத்த வேண்டும் எனவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் மேற்படி நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.