சிட்னி கிழக்கிலுள்ள பொன்டி கடற்கரையில் ஐந்து இளம் பெண்கள்மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது யூத விரோத சம்பவமென சந்தேகிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்களை நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் தேடிவருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு பொலிஸார் வருகைதந்த வேளை இவர்கள் தப்பியோடியுள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரொன்று மீட்கப்பட்டுள்ளது. அதற்குள் முட்டைகள் இருந்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள ஐவரும் யூத பெண்களாவர்.
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிரித்துவருகின்றன.