வடக்கு குயின்ஸ்லாந்தில் மழை தொடரக்கூடிய சாத்தியம் இருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் நிதிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலையொன்றின் ஒரு பகுதியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால், சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தில் மூழ்கி 60 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ள அனர்த்தமாக இது அமைந்துள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.