மெல்பேர்ண் நகரில் நடந்த பேரணியின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் கொடியை காட்சிப்படுத்திய நபரை, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பட்டுள்ளது.
மெல்பேர்ணை சேர்ந்த 34 வயது நபரொருவருக்கே இவ்வாறு சம்மன் அனுப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி அவர் மெல்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் சின்னத்தை காட்சிப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
இக்குற்றத்துக்காக 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.