Northern Territoryயில் பூர்வக்குடி மக்களுக்காக 842.6 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை கூட்டாட்சி அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகாலப்பகுதிக்காக இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
பூர்வக்குடி மக்கள் செறிந்துவாழு; ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் வைத்து இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் அந்தோனீ அல்பானீஸி வெளியிட்டுள்ளார்.
பூர்வக்குடி மக்களுக்கும், பூர்வக்குடி அல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆஸ்திரேலியர்கள் விரும்புகின்றார்கள் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன், பூர்வக்குடி மக்களுடன் இணைந்து பணியாற்ற கூட்டாட்சி அரசு உறுதிபூண்டுள்ளது என பூர்வக்குடி மக்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேற்படி நிதி உதவி பொலிஸ், பெண்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகள் உட்பட சமூக மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
' அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் எதிர்காலத்தை உருவாக்குவதே தமது முதன்மை பணி" எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.