பூர்வக்குடி மக்கள் பயன்படுத்தும் கொடிகள் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடி அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் பிரதமரானால் பூர்வக்குடி மக்களின் கொடி மற்றும் டோரஸ் தீவு கொடி என்பவற்றின் முன்னால் நிற்கப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக நிற்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய தினத்தன்று ஒரு கொடி மாத்திரமே இருக்க வேண்டும் எனவும், பலக்கொடிகள் ஆஸ்திரேலியர்களை பிளவுபடுத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தேசிய பெருமையை புதுப்பிக்க விரும்புவதாகவும், அதற்காக ஒரே கொடி விவாதத்தை முன்னெடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பூர்வக்குடி மக்களின் கொடிகள்மீது தனக்கு நிறைய மதிப்பு உள்ளதாகவும், ஆனால் அவை நாட்டில் தேசியக் கொடி அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.