சிட்னி தென்மேற்கு பகுதியிலுள்ள மயானமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் நபரொருவர் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
30 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
மூவரடங்கிய குழுவொன்று மயானம் வழியாக நடந்து செல்கையில், அப்பகுதியில் இருந்த இளைஞர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.