ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரும், துணை பிரதமருமான ரிச்சட் மார்லஸ், அந்நாட்டு பாதுகாப்பு செயலாளருடன் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பென்டகனில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இந்தோ, பசுபிக் பாதுகாப்பு நிலைவரம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆக்கஸ் கூட்டாண்மையின்கீழ் ஆஸ்திரேலிய பெறவுள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகாரம் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.