எஃகு என்ற கலப்புலோகம் மற்றும் அலுமியினம் ஆகியவற்றுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி விரிவிதிப்பில் இருந்து விடுவிப்பை பெற்றுக்கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்புடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனீ அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
தொலைபேசி ஊடாகவே கலந்துரையாடல் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா வருடாந்தம் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான எஃகு மற்றும் அலுமினியம் என்பவற்றை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலியாவுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் பிரகாரம் எஃகு மற்றும் அலுமினியம் என்பவற்றுக்கு வரி வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.