எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் களமிறங்குவதற்காக டாஸ்மேனிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, லேபர் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான ரெபேக்கா வைட் இராஜினாமா செய்யவுள்ளார்.
2017 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுவரை டாஸ்மேனிய மாநிலத்தில் லேபர் கட்சியை இவர் வழிநடத்தியுள்ளார்.
கூட்டாட்சித் தேர்தலில் லியோன்ஸ் தொகுதியிலேயே ரெபேக்கா வைட் போட்டியிடவுள்ளார்.
தனது இராஜினாமாக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக ரெபேக்கா வைட் தெரிவித்துள்ளார். கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் அதிகாரப்பூர்வமாக பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.