இணையவழி காணொளிமூலம் யூத விரோத கருத்துகளை வெளியிட்ட நியூ சவூத் வேல்ஸ் மாநில தாதியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதைவிட கொல்வது மேலானது என்ற தொனியில் கருத்து வெளியிட்ட இரு தாதியர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிட்னி வைத்தியசாலையில் சேவையாற்றும் தாதியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளியிட்ட அச்சுறுத்தல் காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலரும் அதனை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இக்காணொளி தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் மாநில சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.