300 இற்கு மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட குழந்தை பராமரிப்பாளர்
குயின்ஸ்லாந்து பகுதியில் முன்னாள் குழந்தை பராமரிப்பாளர் ஒருவர், 300 இற்கு மேற்பட்ட சிறார் பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
Ashley Paul Griffith எனும் 46 வயதுடைய நபரொருவரே இவ்விவகாரம் தொடர்பில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் நேற்று முற்படுத்தப்பட்டார். இதன்போது நீதிபதியால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட, ஒவ்வொன்றுக்கும் தான் ‘குற்றவாளி’ என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.
2008 மற்றும் 2022 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே பிரிஸ்பேன் முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் பணிபுரியும்போது இவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் 2022 ஆகஸ்ட் மாதம் பெரடல் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தொடர்பான மன நல விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.