தமது நாட்டு கண்காணிப்பு விமானம் சீனாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சீனாவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஆஸ்திரேலியா அடியோடு நிராகரித்துள்ளது.
சர்வதேச வான் எல்லைக்குள் நுழையும் அதிகாரம் தமது நாட்டுக்கு இருப்பதாகவும், சீன போர் விமானத்தின் நடவடிக்கை தவறானது எனவும் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபடும் முழு உரிமையும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சீன போர் விமானத்தின் நடவடிக்கை முற்றிலும் தவறானது என்று துணை எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே விமர்சித்துள்ளார்.