நியூகேஸில் நகரில் இறைச்சி வெட்டும் கத்தியை வைத்து அச்சுறுத்திய நபர்மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேபீல்ட் பகுதிக்கு மாலை 4 மணியளவில் அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்குவந்த அதிகாரிகளை நோக்கி, கத்தியுடன் குறித்த நபர் ஓடியுள்ளார். அவரை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் டேசர் பயன்படுத்தினர். எனினும், அவர் முன்னோக்கி சென்ற நிலையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 40 வயது நபருக்கு துணை மருத்துவர்களால் உடன் சிகிச்சையளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.