மெல்பேர்ணில் பதிவாகியுள்ள இரு சம்பவங்கள், இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்களா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஸ்ட்ரீட்டிலுள்ள ஷாப்பிங் சென்டரில், ஹிஜாப் அணிந்திருந்த இரு யுவதிகள் தாக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த கோணத்தில் விசாரணை இடம்பெறுகின்றது.
26 மற்றும் 30 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பெண்ணொருவரே இவர்களை தாக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குததால் தாம் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியில் செல்வதற்கு அச்சமாக உள்ளது எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இது இஸ்லாமிய வெறுப்பு தாக்குதலாக இருக்கலாம் என முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இரு பெண்களில் ஒருவர், கர்ப்பிணி தாயெனவும் கூறப்படுகின்றது.