ஆஸ்திரேலியாவில் வருடாந்தம் 7.6 மில்லியன் டன்களுக்கு அதிகமான உணவு வீண்விரயமாக்கப்படுகின்றது என தெரியவருகின்றது.
எனினும், வாழ்க்கைச் செலவு நெருக்கடி அதிகரித்துள்ளதால் கடந்தகாலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது உணவு வீண்விரயமாவது ஓரளவு குறைந்துள்ளது.
வீண் விரயமாக்கப்படும் உணவுகளில் 70 சதவீமானவை உண்ணக்கூடிய நிலையிலேயே வீசப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் கடந்தவரும் 3.5. மில்லியன் பேர் பட்டினியை எதிர்கொண்டனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
எனவே, உணவு வீண்விரயமாவதை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, உணவு வீண்விரயமாவதை தடுப்பதற்கு கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.