சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தையொன்று திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
பிரிஸ்பேன் கிழக்கில் உள்ள சிறார் பராமரிப்பு நிலையமொன்றிலேயே நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டாலும், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பொலிஸார் காத்திருக்கின்றனர். அத்துடன், சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.