ஆஸ்திரேலிய, இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய கூட்டாண்மை!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான சுற்றுலா உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஏர் இந்தியா மற்றும் வேர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய நிறுவனங்கள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 16 பிராந்திய அலுவலகங்களை திறக்கும் புதிய கூட்டாண்மையைத் தொடங்கியுள்ளன.
புதிய கூட்டாண்மை விமான வாடிக்கையாளர்களின் பயண விருப்பங்களை அதிகரிக்கும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து மெல்பேர்ண் அல்லது சிட்னிக்கும், பின்னர் வேர்ஜின் ஆஸ்திரேலியா விமானங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முழுவதும் 16 இடங்களுக்கும் இணைப்புகளை வழங்கும் எனவும் கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு வாராந்தம் 14 முறை விமானங்களை இயக்குகிறது.
டெல்லியில் இருந்து மெல்பேர்ண் மற்றும் டெல்லியில் இருந்து சிட்னிக்கு இடைவிடாமல் பறக்கிறது. இந்த வழித்தடங்களில் விமான நிறுவனம் அதன் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தைப் பயன்படுத்துகிறது.
சபா.தயாபரன்