விக்டோரிய மாநில அரசாங்கம், பொதுத்துறை செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்குரிய வழிமுறைகள் பற்றி மதிப்பீடு செய்துவருகின்றது.
இதற்கமைய சுமார் 3 ஆயிரம்வரையிலான அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என தெரியவருகின்றது.
அடுத்த வரவு -செலவுத் திட்டத்திலேயே பொதுத்துறை செலவீனங்களை குறைப்பதற்கு விக்டோரிய அரசு முயற்சித்துவருகின்றது. இத்திட்டம் பொதுத்துறை தொழிற்சங்கங்களை கொதிப்படைய வைத்துள்ளது.
வாக்கு வேட்டைக்காக, அமெரிக்காவின் எலோன் மஸ்க்கின் வழிமுறையை அரசு பின்பற்றுகின்றது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொதுத்துறையில் 3000 ஆயிரம் பேர் பணி நீக்கப்படவிருந்தாலும் அவர்களுள் ஆசிரியர்கள், பொலிஸார் மற்றும் சுகாதார சேவையினர் உள்ளடங்கமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.