ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பிக்கும் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
உள்துறை திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் மே மாதம் 119 பேரும், ஜுன் மாதம் 157 பேரும், ஜுலை மாதம் 176 பேரும் இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர்.
மே மாதம் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான பாலஸ்தீனர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வழங்கப்படவில்லை எனவும் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த அணுகுமுறை குறித்து கிறீன்ஸ் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், இனப்படுகொலையிலிருந்து தப்புவதற்கு முற்படும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலாவது விசா வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பாலஸ்தீனர்களுக்கான பாதுகாப்பு விசா நடைமுறையை இடைநிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் வலியுறுத்தியுள்ளார்.