கத்தியைக்காட்டி மிரட்டி பெண்ணொருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று வடக்கு குயின்ஸ்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
கெய்ர்ன்ஸ் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் புகுந்துள்ளனர்.
வீட்டில் இருந்த குடியிருப்பாளர்களை குறித்த இளைஞர்கள் கத்தியைக்காட்டி மிரட்டியுள்ளனர் எனவும், இரு இளைஞர்கள் பெண்ணொருவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.