வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆஸ்திரேலியாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்புகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்களிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையிலேயே, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரும்பு மற்றும் அலுமினியம்மீது கூடுதலாக 25 சதவீத வரியை ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இது அமுலுக்கு வரவுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து பெருமளவு இரும்பு மற்றும் அலுமினியம் என்பன அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இது விடயத்தில் வரி விலக்கை கன்பரா எதிர்பார்க்கின்றது.
பைடன் ஆட்சியின்போது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவு மேம்பட்டது. ட்ரம்பின் முதலாவது ஆட்சிகாலத்திலும் இரு நாடுகளுக்கிடையிலான உறவு சிறப்பாக இருந்தது. எனவே, ஆஸி.மீது ட்ரம்ப் வர்த்தகப்போரை தொடுக்க மாட்டாரென ஆஸ்திரேலிய தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.