வடக்கு குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளத்தைத் தொடர்ந்து டவுன்ஸ்வில்லில் அரிதான மண் மூலம் பரவும் பாக்டீரியா நோயான மெலியோய்டோசிஸால்(Melioidosis) மூன்று பேர் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு இந்த நோயால் இப்பகுதியில் முதல் சில இறப்புகளில் நேற்று இரண்டு பேர் இறந்ததாகவும், கடந்த வாரம் ஒருவர் இறந்ததாகவும் டவுன்ஸ்வில் மருத்துவமனை மற்றும் சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
இன்னும் 21 தொற்றுக்கள் உள்ளதாக பிராந்திய சுகாதார மையம் தெரிவித்துள்ளது,
"மெலியோய்டோசிஸ் என்பது வடக்கு ஆஸ்திரேலியாவில் பர்கோல்டேரியா சூடோமல்லே எனப்படும் மண் பாக்டீரியாவால் ஏற்படும் மிகவும் கடுமையான ஒரு அரிய வெப்பமண்டல தொற்று நோயாகும்.இது தோலில் ஏற்படும் ஒரு முறிவு மாசுபட்ட தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது அல்லது சேற்று நீர்த்துளிகளை சுவாசிப்பதன் மூலம் இது உடலில் நுழைந்து நிமோனியாவை ஏற்படுத்தும் "என்று பிராந்தியத்தின் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் ஸ்டீவன் டோனோஹூ கூறினார்.
"மெலியோய்டோசிஸின் அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், மார்பு வலி, எடை இழப்பு, தசை வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும்," என்று அவர் கூறினார்.
மெலியோய்டோசிஸைத் தடுக்க தடுப்பூசி எதுவும் இல்லை என்றாலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் சிகிச்சையளிக்க முடியும்.
"மண் அல்லது வெள்ளநீருடன் தொடர்பு கொள்ளும்போது கையுறைகள், காலணிகள் மற்றும் முகமூடியை அணிய வேண்டும் என்று டோனோஹூ கூறினார்
ஆறாத காயங்கள், மார்பு தொற்று அல்லது காய்ச்சலைக் கண்ட எவரும் மருத்துவ உதவியை நாடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
சபா.தயாபரன்.