70 தனிநபர்கள் மற்றும் 79 நிறுவனங்களை இலக்கு வைத்து நிதி மற்றும் பயணத்தடைகளை ஆஸ்திரேலியா விதித்துள்ளது.
கிழக்கு உக்ரைன் மற்றும் கிரிமியாவில் ரஷ்யாவால் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்டவிரோத போருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு வழங்கும் தரப்பினரை இலக்கு வைத்தே இத்தடை இன்று விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா போர்தொடுக்க ஆரம்பித்த பிறகு ஆஸ்திரேலியாவால் ஒரே தடவையில் பெருமளவானோருக்கு தடைகள் விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அத்துடன், ரஷ்யா மற்றும் வடகொரிய பாதுகாப்பு கூட்டாண்மையை ஆதரிக்கும் தரப்புகளும் இலக்குவைக்கப்பட்டு, நிதி மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் நீடித்த அமைதியே ஆஸ்திரேலியாவின் நோக்கம் எனவும், இதனால் ரஷ்யா உடன் போரை நிறுத்தி, சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செயல்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.