மெல்பேர்ண், கிழக்கிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு, தப்பிச்சென்ற நான்கு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கியூ பகுதியிலுள்ள வீடொன்றை நோக்கி இன்று அதிகாலை 4 மணியளவில் களவாடப்பட்ட வாகனமொன்றில் நான்கு சிறார்கள் வந்துள்ளனர்.
வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த நபர்கள், அங்கிருந்த பெண்ணை மிரட்டியுள்ளனர்.
அவரின் வாகன சாரதியை கேட்டுள்ளனர். பின்னர் தொலைபேசி, பணம் மற்றும் நகைகளையும் களவாடியுள்ளனர்.
கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டு சிறார்கள் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.