ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்த முற்பட்ட சிங்கப்பூர் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருட்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டுவரப்பட்ட 32 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் 8 கிலோ கொக்கைன் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மலேசியாவிலிருந்து சிட்னி வந்த விமானத்திலேயே இவ்வாறு போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
எனினும், 52 வயதான சிங்கப்பூர் பிரஜை சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தான் எவ்வித பொருள்களையும் எடுத்துவரவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பொருள்கள் அவருக்குரியவை என கண்டறியப்பட்டது. பின்னர் அவர் மலேசியாவுக்கு தப்பிச்செல்வதற்கு முற்பட்டவேளை அடிலெய்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.