உக்ரைன் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் படையினர் உட்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் இத்தாக்குதலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் மிருகத்தனமான போருக்கு எதிராக போராடும் உக்ரைனுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆஸ்திரேலிய அரசின் சார்பில் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ,“உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷ்யாவுக்கு கொடுப்போம்” என்று உக்ரைன் ஜனாதிபதி சூளுரைத்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டும் பெப்ரவரி 24 ஆம் திகதி அதிகாலையில் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. 2 ஆண்டுகள் கடந்து இன்றளவும் போர் நீடிக்கின்றது.