நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது எட்டு வயது மகளுக்கு, மூட நம்பிக்கையால் இன்சுலினை வழங்காது, அவர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து உயர்நீதிமன்றத்தாலேயே இன்று மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரியில் எலிசபெத் ஸ்ட்ரூஸ் என்ற சிறுமி உயிரிழந்திருந்தார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இச்சிறுமிக்கு உயிர்வாழ்வதற்கு இன்சுலின் தேவைப்பட்டது.
எனினும், புனிதர்கள் எனக் கூறிக்கொள்ளும் மதப் பிரிவினர், அதனை சிறுமிக்கு வழங்குவதை தவிர்த்துள்ளனர்.
' நோய்க்கு சிகிச்சை அவசியமில்லை, கடவுள் குணப்படுத்துவார்" என்ற மூட நம்பிக்கையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தனர் எனக் கருதப்பட்ட மதப்பிரிவொன்றை சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிறுமியின் தந்தை மற்றும் மேற்படி மதப்பிரிவின் மதகுரு உட்பட 14 பேர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர்.
சிறுமியின் தந்தைக்கு 14 ஆண்டுகளும், மதப்பிரிவின் தலைவருக்கு 13 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலத்தில் 80 சதவீதத்தை எதிர்கொண்ட பின்னரே அவர்கள் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.