மெல்பேர்ணில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விமான நிலைய ரயில் திட்டத்துக்காக பிரதமர் அந்தோனி அல்பானீஸி 2 பில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
மெல்பேர்ண் விமான நிலைய ரயில் இணைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் புதிய தளங்கள் மற்றும் தண்டவாளங்களுடன் சன்ஷைனில் ஒரு புதிய ரயில் மையத்தை உருவாக்கும் நோக்கிலேயே இதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் விமான நிலைய ரயிலின் முதல் கட்ட பணி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், இணைப்பை மேம்படுத்தவும், புறநகர் சாலைகளில் வாகன நெரிசலை சமாளிக்கவும் 5.3 பில்லியன் டொலர் கூட்டாட்சி நிதி உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஆரம்பமாகவுள்ளது.
சபா.தயாபரன்