ஆஸ்திரேலியாவுக்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்த முற்பட்ட செக் குடியரசை சேர்ந்த ஆணொருவரும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்திலிருந்து சிட்னி நோக்கி வந்த விமானத்தில் பயணித்த 54 வயது ஆணும், 46 வயதான பெண்ணுமே எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் சூட்சுமமான முறையில் பொதியிடப்பட்டிருந்த பொட்டலங்களில் இருந்து 12 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்தும் கும்பலில் உள்ள உறுப்பினர்களே இவர்களென கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் இவர்கள் சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.