சீனாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் 40 உய்குர் முஸ்லிம்களை, நாடு கடத்தும் தாய்லாந்து அரசின் முடிவுக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த சுமார் 1.2 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
கடந்த 20-ம் நூற்றாண்டில் ஜின் ஜியாங் பகுதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 1949-ம் ஆண்டில் சீன ராணுவம் ஜின்ஜியாங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே சீன இராணுவத்தை எதிர்த்து உய்குர் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களை ஓடுக்க சீன அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடக்குமுறையால் உய்குர் முஸ்லிம் மக்கள் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர்.
இவ்வாறு தாய்லாந்து சென்ற நிலையில் பாங்காக் தடுப்பு மையத்தில் 10 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குழுவையே, சீனாவின் ஜின்ஜியாங் பகுதிக்கு திருப்பி அனுப்ப தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
இந்நிலையிலேயே தாய்லாந்தின் முடிவை ஆஸ்திரேலியா எதிர்த்துள்ளது.
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வரவேண்டும் என ஆஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.