அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையே உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை வெள்ளைமாளிகை ஓவல் அரங்கில் கனிம வளங்கள்ஐப் பகிர்ந்து கொள்வதற்கன பேச்சுவார்த்தை நடைபெற்றது. இச் சந்திப்பில் ஏற்பட்ட காரசாரமான மோதலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இகு குறுத்து கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உக்ரைனுக்கு தனது நாட்டின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
"நாங்கள் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்போம்" என்று உள்ளூர் நேரப்படி சனிக்கிழமையன்று காலை அந்தோனி அல்பானீஸ் கூறினார், மேலும் ஐரோப்பிய நாட்டிற்கு ஆதரவு அவுஸ்திரேலியாவின் தேசிய நலனுக்கானது என்று கூறினார்.
"உக்ரைனின் போராட்டத்தில் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிற்கிறோம், ஏனெனில் இது சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாக நாங்கள் கருதுகிறோம்" என்று அல்பானீஸ் கூறினார்.
"இது ஒரு ஜனநாயக தேசம் மற்றும் விளாடிமிர் புட்டின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டம், அவர் உக்ரைனில் மட்டுமல்ல, அந்த பகுதி முழுவதும் ஏகாதிபத்திய வடிவமைப்புகளை தெளிவாகக் கொண்டுள்ளார்" என்று அவர் மேலும் கூறினார்.
ரஷ்யா அந்நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் அமைதி சாத்தியமாகும் என்று பிரதமர் கூறினார்.
ரஷ்யா தனது சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான தனது படையெடுப்பை பொதுமக்கள் மீது மூன்று ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டுள்ளனர்," என்று பிரதமர் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஓவல் அலுவலக சந்திப்பு தோல்வியில் முடிந்ததை அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் .
அதற்குப் பதிலளித்த ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருப்பது உலக அரங்கில் பேசு பொருளாகியுள்ளது.
சபா.தயாபரன்