குடும்ப வன்முறையின்போது தனது துணைமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 31 வயது பெண்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
டார்வின், அலவா வடக்கு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 33 வயது நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார் என தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள 33 வயது பெண்ணை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.